twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவனாவின் ஏக்கம்!!

    By Staff
    |

    மலையாளத்து பாவனாவுக்கு தமிழில் ஒரு தீராத ஏக்கம் தினசரி கனவுக் கதவைத் தட்டி விட்டுப் போகிறதாம்.

    மலையாளத்து குயிலான பாவனாவுக்கு நல்ல குரல் வளம், அதேபோல நல்ல கவி வளமும் கூட. ஷூட்டிங் பிரேக்கின்போது நகம் கடிக்கும் கையும், பேப்பரைக் கடிக்கும் பேனாவுமாகத்தான் இருக்கிறார்.

    அம்மணி ஏன் இப்படி என்று கிட்டப் போய் உற்றுப் பார்த்தால்தான் அவர் கவிதை எழுதிக் கொண்டிருப்பது தெரியும். பாவனாவுக்கு கவிதை எழுதுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். கிடைக்கிற கேப்பில் கிடுகிடுவென கவிதைகளாக எழுதித் தள்ளி விடுவாராம்.

    ஷூட்டிங்கில் பார்க்கும் விஷயம், இயற்கை, காதல், கோபம், தாபம் என பல வகையான கவிதைகளை எழுதிக் குவித்து வைத்துள்ளாராம். எல்லாவற்றையும் தொகுத்து புக் போடும் ஆவலும் உள்ளதாம்.

    அப்படியே தனது மலையாளக் கவிதைகளை தமிழிலும் பிரசுரித்து தமிழ் மக்களையும் அசத்திடணும் என்ற பேராசையும் உள்ளதாம். இதுதான் அடிக்கடி அவரது கனவில் வந்து தனது கவிதைகள் எப்போது தமிழ் பேசும் என்று கேட்டு வருகிறதாம்.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் எழுதிக் குவித்து வரும் கவிதைகளை மலையாளம் தெரிந்தவர்களிடம் வாசித்துக் காட்டி, எங்ஙன (எப்படி) உண்டு (இருக்கு) சேட்டா (பிரதர்)? என்று கேட்டு அணத்துகிறாராம் பாவனா.

    இந்த அணத்தல் தாங்க முடியாமல் பாவானவைப் பார்த்தாலே பாதிப்பேர் அப்படியே கழன்று கொண்டு கமுக்கமாக ஒதுங்கி விடுகிறார்களாம்.

    இருந்தாலும் பாவனாவின் கவிதைகள் அவ்வளவு மோசம் இல்லைதான். பாவனாவின் விழிகள் போலவே அவரது கவிதைகளும் கூராகவே இருக்கிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X