Don't Miss!
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- News தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘கெஸ்ட் ரோல் தான், ஹீரோயின் இல்லை’... மல்லிகா இயக்கும் படம் குறித்து பாவனா விளக்கம்
சென்னை: ஆட்டோகிராப் படத்தில் நடித்த மல்லிகா இயக்கும் மலையாளப் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை என நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
ஆட்டோகிராப், திருப்பாச்சி, சென்னையில் ஒரு நாள் உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மல்லிகா. இவர் முதல்முறையாக ‘பழனியிலே கனகம்' என்ற பெயரில் முதன்முறையாக மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார்.
சினிமாவில் துணை நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக அலசும் கதைக்களம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், இப்படத்தில் ஹீரோயினாக பாவனா நடிப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாவனா, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நட்பு அடிப்படையில் மல்லிகா கேட்டதால், அவர் இயக்கும் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால், நான் ஹீரோயினாக நடிப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. எனக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங். நான் ஏற்பது கவுரவ வேடம். ஹீரோயின் அல்ல. இப்போது மலையாளத்தில் நடிக்கிறேன். தமிழில் விஜய்யுடன் ‘புலி' படத்தில் கேட்டுள்ளனர். நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.