twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜில்... மீண்டும் வரும் பூமிகா சூர்யாவும்-ஜோதிகாவும் ஜோடி சேரும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க இருந்த அசின் இப்போது நடிக்க மறுத்துவிட்டாராம்.இதையடுத்து அவருக்குப் பதிலாக பூமிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சூர்யாவின் உறவினர் ஒருவர் தயாரிக்கும் படம் ஜில்லுனு ஒரு காதல். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அவருக்கு ரொம்ப வேண்டியஜோதிகா நடிக்க, இன்னொரு கேரக்டரில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க இருந்தார் ஆசின். இதற்காக அவருக்கு ரூ. 20 லட்சம்அட்வான்சும் தரப்பட்டது.முதலில் இதற்கு ஒப்புக் கொண்டவர் டேட்ஸ் தராமல் இழுத்தடித்தாராம். இந் நிலையில் ஆசின் தொடர்பான காட்சிகளைஇயக்குனர் அவரிடம் விளக்கினாராம். இவ்வளவு சின்ன ரோலா என்று கேட்டவர், நான் இதுல நடிக்கலை என்று சொல்லிதிடீரென மறுத்துவிட்டாராம். ஜோதிகா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நான் துக்கடா வேடம் செய்தால் சரி வராது என்று சொல்லிவிட்டாராம். இதையடுத்துயாரைப் போடுவது என்று குழம்பிய சூர்யாவுக்கு பூமிகாவின் நினைவு வந்ததாம்.இப்போது இந்தியில் பிஸியாக இருக்கும் பூமிகாவை சூர்யாவே தொடர்பு கொண்டு பேசினாராம். தமிழில் நல்ல படத்துக்காகத்காத்திருப்பதாகக் கூறிய பூமிகா அதில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.மும்பையில் மாடலிங்கில் இருந்த பூமிகா சாவ்லாவை தனது ரோஜாக் கூட்டம் படத்தின் மூலமாக தமிழுக்குக் கொண்டு வந்தார்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். முதல் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுவிட பூமிகா மீது அதிகமான எதிர்பார்ப்புஏற்பட்டது.அதைத் தொடர்ந்து விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் ஊத்திக் கொண்டது. அதையடுத்து தமிழில்படங்கள் ஏதும் வராத நிலையில் தெலுங்கு அவரை வாரிக் கொண்டது. அங்கு கவர்ச்சி கோதாவிலும் குதித்துக் கலக்கிய பூமிகாநடித்த 10 படங்களில் 7 படங்கள் பெரும் வெற்றியடைந்த நிலையில் இந்தி கூப்பிட்டுக் கொண்டது. இதனால் தெலுங்கில் கமா போட்டுவிட்டு இப்போது இந்தியில் மிக பிஸியாக இருக்கிறார்.பாலிவுட்டுக்கு ஏற்ப தன்னை மிகவும் மாற்றிக் கொண்டுவிட்ட பூமிகா மும்பையில் நடக்கும் வீக் எண்ட் பார்ட்டிகளில் கலக்கிவருகிறார். ஷாம்பைன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் என்று கூறிக் கொண்டு தண்ணி அடிக்கும் பூமிகா, தனது பாய்பிரண்டானாயோகா மாஸ்டர் பரத் என்பவருடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து போகும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.சில்சிலே என்ற படத்தில் மிக தாராளமாக கவர்ச்சி காட்டி விளாசிவிட்டார். இப்படியாக இந்தியில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் பூமிகா தமிழ் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டு தான் இருந்தார்.சூர்யா கூப்பிட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம்.

    By Staff
    |
    சூர்யாவும்-ஜோதிகாவும் ஜோடி சேரும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க இருந்த அசின் இப்போது நடிக்க மறுத்துவிட்டாராம்.

    இதையடுத்து அவருக்குப் பதிலாக பூமிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சூர்யாவின் உறவினர் ஒருவர் தயாரிக்கும் படம் ஜில்லுனு ஒரு காதல். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அவருக்கு ரொம்ப வேண்டியஜோதிகா நடிக்க, இன்னொரு கேரக்டரில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க இருந்தார் ஆசின். இதற்காக அவருக்கு ரூ. 20 லட்சம்அட்வான்சும் தரப்பட்டது.

    முதலில் இதற்கு ஒப்புக் கொண்டவர் டேட்ஸ் தராமல் இழுத்தடித்தாராம். இந் நிலையில் ஆசின் தொடர்பான காட்சிகளைஇயக்குனர் அவரிடம் விளக்கினாராம். இவ்வளவு சின்ன ரோலா என்று கேட்டவர், நான் இதுல நடிக்கலை என்று சொல்லிதிடீரென மறுத்துவிட்டாராம்.

    ஜோதிகா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நான் துக்கடா வேடம் செய்தால் சரி வராது என்று சொல்லிவிட்டாராம். இதையடுத்துயாரைப் போடுவது என்று குழம்பிய சூர்யாவுக்கு பூமிகாவின் நினைவு வந்ததாம்.

    இப்போது இந்தியில் பிஸியாக இருக்கும் பூமிகாவை சூர்யாவே தொடர்பு கொண்டு பேசினாராம். தமிழில் நல்ல படத்துக்காகத்காத்திருப்பதாகக் கூறிய பூமிகா அதில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

    மும்பையில் மாடலிங்கில் இருந்த பூமிகா சாவ்லாவை தனது ரோஜாக் கூட்டம் படத்தின் மூலமாக தமிழுக்குக் கொண்டு வந்தார்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். முதல் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுவிட பூமிகா மீது அதிகமான எதிர்பார்ப்புஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் ஊத்திக் கொண்டது. அதையடுத்து தமிழில்படங்கள் ஏதும் வராத நிலையில் தெலுங்கு அவரை வாரிக் கொண்டது. அங்கு கவர்ச்சி கோதாவிலும் குதித்துக் கலக்கிய பூமிகாநடித்த 10 படங்களில் 7 படங்கள் பெரும் வெற்றியடைந்த நிலையில் இந்தி கூப்பிட்டுக் கொண்டது.

    இதனால் தெலுங்கில் கமா போட்டுவிட்டு இப்போது இந்தியில் மிக பிஸியாக இருக்கிறார்.

    பாலிவுட்டுக்கு ஏற்ப தன்னை மிகவும் மாற்றிக் கொண்டுவிட்ட பூமிகா மும்பையில் நடக்கும் வீக் எண்ட் பார்ட்டிகளில் கலக்கிவருகிறார். ஷாம்பைன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் என்று கூறிக் கொண்டு தண்ணி அடிக்கும் பூமிகா, தனது பாய்பிரண்டானாயோகா மாஸ்டர் பரத் என்பவருடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து போகும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.

    சில்சிலே என்ற படத்தில் மிக தாராளமாக கவர்ச்சி காட்டி விளாசிவிட்டார். இப்படியாக இந்தியில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் பூமிகா தமிழ் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டு தான் இருந்தார்.

    சூர்யா கூப்பிட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம்.

      Read more about: bhoomika is back in tamil
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X