Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நம் நாட்டு ஜனாதிபதி மோடியாம்: சொல்கிறார் நடிகை கரிஷ்மா
மும்பை: நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நரேந்திர மோடி என்று இந்தி நடிகை கரிஷ்மா தன்னா பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் டிவி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தி நடிகை கரிஷ்மா தன்னா கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியின்போது சல்மான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பொது அறிவை சோதிக்க பல்வேறு கேள்விகள் கேட்டார். அப்போது நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கடினமான கேள்வியை சல்மான் கேட்டார். அதற்கு கரிஷ்மா நரேந்திர மோடி என்று பதில் அளித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு நம் நாட்டின் பிரதமர் யார், குடியரசுத் தலைவர் யார் என்றே தெரியாததை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் பெயரை தெரிவித்தார்.
பொது அறிவில் ஆலியா தான் ஞானசூனியம் என்றால் கரிஷ்மா அவருக்கு மேல் உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.