Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நம் நாட்டு ஜனாதிபதி மோடியாம்: சொல்கிறார் நடிகை கரிஷ்மா
மும்பை: நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நரேந்திர மோடி என்று இந்தி நடிகை கரிஷ்மா தன்னா பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் டிவி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தி நடிகை கரிஷ்மா தன்னா கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியின்போது சல்மான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பொது அறிவை சோதிக்க பல்வேறு கேள்விகள் கேட்டார். அப்போது நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கடினமான கேள்வியை சல்மான் கேட்டார். அதற்கு கரிஷ்மா நரேந்திர மோடி என்று பதில் அளித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு நம் நாட்டின் பிரதமர் யார், குடியரசுத் தலைவர் யார் என்றே தெரியாததை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் பெயரை தெரிவித்தார்.
பொது அறிவில் ஆலியா தான் ஞானசூனியம் என்றால் கரிஷ்மா அவருக்கு மேல் உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.