Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கொரோனாவை நினைச்சா வெளிய வரவே பயமா இருக்கு… நடிகை ஜனனி !
சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஜனனி.
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்த நடிகையானார்.
தாலியை கழட்டினா என்ன தப்பு? நெட்டிசன்களுடன் மல்லுக்கட்டும் பிக்பாஸ் அனிதா சம்பத்!
தற்போது பட வேலைகளைக் தொடங்கி உள்ளது மகிழ்ச்சியை அளித்தாலும், கொரோனாவை நினைச்சா பயமா இருக்கு என்று கூறியுள்ளார்.
நல்ல பெயர்
பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் பெண் காவலாளியாக வந்து இருப்பார் ஜனனி. அந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதையடுத்து, பாகன், தெகிடி, அதே கண்கள் முப்பரிமாணம் பல திரைப்படங்களில் நடித்தார்.
105 நாட்கள் இருந்தார்
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடத்திலும் அன்பாக பழகினார். இதனால் இறுதிவரை வெளியேறாமல் பிக்பாஸ் இல்லத்தில் 105 நாட்கள் வரை இருந்து நான்காவது இடத்தை பிடித்தார்.
மாற்றம் ஒன்றே மாறாதது
சமீபத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது எனக்கூறி ஜனரி ஐயர் என்ற பெரியலிருந்து ஜாதியை நீக்கினார். மேலும், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் கூறியிருந்தார். ஜாதி துறப்பை வரவேற்று ஜனனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பயமா இருக்கிறது
இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ளதால் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டப்பிங் பணியை தொடங்கி உள்ள ஜனனி, கொரோனா பல உயிர்களை காவு வாங்கிடுச்சி, எல்லாத்தையும் மாத்திடுச்சி , பட வேலைகள் தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளித்தாலும் கொரோனாவை நினைச்சா பயமாத்தான் இருக்கு என்று கூறியுள்ளார்.
தைரியமாக இருக்கிறேன்
மேலும், கொரோனாவை நினைச்சி பயந்துகிட்டு வீட்டிலேயே இருக்க முடியாது , வெளியில வந்துதான ஆகனும், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறது என்று கூறினார். இருந்தாலும் கவனமா இருக்க வேண்டியது நமது கடமை என்றார். கசட தபற , யாக்கை திரி, பஹிரா, முன்னறிவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.