Bigg Boss Poornima - படுக்கையறை காட்சி.. தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்.. பிக்பாஸ் பூர்ணிமா ஓபன் டாக்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் பூர்ணிமா. அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாண்டார். அடிப்படையில் சினிமா மீது ஆர்வம் உடைய அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் சில கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதுவரை ஏழு சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. நடந்து முடிந்த ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் டாக் ஆஃப் தி ஹவுஸாக இருந்தவர்களில் ஒருவர்தான் பூர்ணிமா. மாயாவுடன் சேர்ந்துகொண்டு அவர் செய்த அலப்பறைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கிட்டத்தட்ட 80லிருந்து 90 நாட்கள்வரை வீட்டுக்குள் இருந்தார்.

அராத்தி பூர்ணிமா: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார். அவர் அராத்தி என்ற பெயரில் யூட்யூப் சேனலை நடத்துகிறார். என்னதான் யூட்யூப் சேனல் மூலம் அவருக்கு பிரபல்யம் கிடைத்தாலும் பிக்பாஸ் பிளாட்பார்ம் தனது வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் நினைத்தபடியே மேற்கொண்டு பிரபல்யம் பிக்பாஸ் மூலம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்னபூரணி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னதாக ஹாட் ஸ்டாரில் வெளியான ஹே சண்டைக்காரி வெப் சீரிஸில் நடித்திருந்த அவர்; நயன் தாராவின் 75ஆவது படமான அன்னபூரணியிலும் கமிட்டானார். அவர் வீட்டுக்குள் இருந்தபோதே அன்னபூரணியில் பூர்ணிமா இருக்கும் போஸ்டர் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக பிக்பாஸ் முடிந்ததும் மேலும் சில பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
செவப்பி: எதிர்பார்த்தபடியே செவப்பி என்ற படத்திலும் நடித்தார். ஆஹா ஓடிடி தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு அந்தப் படம் வெளியானது. படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பூர்ணிமாவின் கெட்டப்புக்கும், நடிப்புக்கு அப்ளாஸ்கள் கிடைத்தன. செவப்பி படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதால் மேற்கொண்டு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
பூர்ணிமாவின் பேட்டி: இந்நிலையில் பூர்ணிமா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்து பேசியிருந்த அவர், "படுக்கையறை காட்சி என்று இல்லை எந்தக் காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போயிருக்க வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. முக்கியமாக ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்: அதனையடுத்து நடிகர் தனுஷ் குறித்து பேசியிருந்த அவர், "தனுஷ்தான் எனக்கு பிடித்த நடிகர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார். அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆச்சரியத்தை கொடுக்கும்.பக்கத்து வீட்டு பையன் போன்று அவர் இருப்பதால் திரையரங்குகளுக்கு அவரை பார்ப்பதற்காகவே பார்வையாளர்கள் வருவார்கள். நடிகைகளில் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷை பிடிக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











