Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
யாஷிகாவுக்கு கல்யாணம்.. லவ் மேரேஜா?.. அரேஞ்ஜா?.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், திருமணம் குறித்த மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
மாடலான யாஷிகா, கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
இதையடுத்து, ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.
அஜித்துக்கு வில்லன் நான்தான் என விஜய் என்னிடம் கூறினார்!
யாஷிகாஆனந்த்
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தார் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அழகு பதுமையாக வலம் வந்த யாஷிகாவின் க்யூட்டான பேச்சால் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மோசமான விபத்து
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படம், சோஷியல் மீடியா, போட்டோஷூட் என படு பிஸியாக இருந்த யாஷிகா ஆனந்த், கடந்த ஆண்டு ஒரு மோசமான விபத்தில் சிக்கி இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிந்து கிட்டத்தட்ட 3மாதம் படுத்த படுக்கையாக இருந்தார். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய யாஷிகா கைவசம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
லவ் மேரேஜா? அரேஞ்ஜா?
தற்போது யாஷிகா தனது கல்யாணம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். கல்யாணத்திற்கு இது தான் சரியான நேரம் என்று என் அம்மாவும் அப்பாவும் என் திருமணத்தை முடிவு செய்துள்ளனர். எனக்கு சினிமா ரொம்பவும் பிடிக்கும், நான் எப்போதும் உங்களை மகிழ்வித்துக்கொண்டே இருப்பேன் என்றும். இது அரேஞ்ஜ் மேரேஜ் தான் என்றும் நமக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட்டாகாது என்றும் கூறியுள்ளார்.
குழம்பிய ரசிகர்கள்
இந்த தகவலால் பல ரசிகர்கள் என்னது யாஷிகாவுக்கு கல்யாணமா? என்றும், நம்பவே முடியல என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் யாஷிகாவுக்கு கல்யாணம் எல்லாம் இல்ல, இன்னைக்கு ஏப்ரல் 1St அதான் யாஷிகா நம்மை ஏமாற்றுகிறார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.