மும்பை மக்களின் மனம் கவர்ந்த ராதே...வீணா மாலிக்!

மும்பை பாஜக தலைவர் ராஜ் புரோஹித்தான், வீணா மாலிக்கை ஸ்பெஷலாக அழைத்திருந்தார். அந்த விழாவில் கிட்டத்தட்ட வீணாவையே அனைவரும் ராதையாக பாவித்து சிறப்பாக கவனித்தனராம்.
இதுகுறித்து ராதை அதாவது வீணா கூறுகையில், இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இப்படி ஒரு சிறப்பான விழாவுக்கு என்னை அழைப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மும்பை மக்கள் மிகுந்த பாசக்காரர்கள், நேசக்காரர்கள். எனக்கு மும்பை மிகவும் அதிர்ஷ்டமான நகரம். எனது இதயத்தோடு நெருங்கிப் போய் விட்டது என்றார்.
பரவாயில்லை, கை நிறையப் படம் இல்லாவிட்டாலும் வாய் நிறையப் புன்னகையுன் அடிக்கடி புகைப்படம் சகிதமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் உள்ளார் வீணா.


Click it and Unblock the Notifications











