Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஹனிமூன்' போக நேரமே இல்லை: நடிகை தியா மிர்சா
மும்பை: பாலிவுட் நடிகை தியா மிர்ஸாவுக்கு தேனிலவை கொண்டாட நேரம் இல்லையாம்.
பாலிவுட்டின் சமத்து பிள்ளை என்று தியா மிர்ஸாவை கூறலாம். அந்த அளவுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவர் தனது நீண்ட நாள் காதலரான சாஹில் சங்காவை கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி டெல்லியில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிவிட்டது தேனிலவை கொண்டாடாமல் வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு தியா கூறுகையில்,
புதுமணத் தம்பதி தேனிலவுக்கு செல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கலாம். நாங்களும் திட்டமிடுகிறோம். ஆனால் நானும், சாஹிலும் வேலையில் பிசியாக உள்ளோம். வேலையை ரசித்து செய்கிறோம். அதனால் தற்போதைக்கு பிரேக் எடுப்பது பற்றி நான் நினைக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அழகாக உள்ளது. திருமணமானதால் கூடுதல் பொறுப்பு எதுவும் வரவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் முன்பே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம்.
குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி முடிவு செய்தால் நிஜமான பொறுப்பு எங்களை வந்து சேரும் என்றார்.