Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
மும்பை: மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரபல நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி டைம் லைனில் இருந்து வருகிறார் பாயல்.
காங்கிரஸ் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தை குறிவைத்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான இவர் ட்விட்டரில் தன்னை ஒரு வலதுசாரி என்று காட்டிக்கொள்கிறார்.
3 நாளுக்குப் பிறகு வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்... மாமாங்கமும் வந்தாச்சாம்!
சமூகப் பிரச்சனை
பசு வதைக்கு தடை விதிக்கவில்லை என்று கேரள மக்களை விமர்சித்ததால் தலைப்பு செய்தியானார். அதன்பிறகு, நடிகை முத்தலாக் சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சர்ச்சைக்குரிய வீடியோ
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர் லால் நேரு பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
லால் பகதூர் சாஸ்திரி
ஜவகர் லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரபரப்பியதாகவும் கூறப்பட்டது. மேலும் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துகளையும் நடிகை பாயல் ரோஹத்கி பதிவு செய்திருந்ததாகவும் தெரிகிறது.
வழக்குப்பதிவு
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளில் நடிகை பாயல் ரோஹத்ஹி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
டிவிட்டரில் தகவல்
இந்நிலையில் நடிகை பாயல் ரோஹத்ஹி இன்று கைது செய்யப்பட்டார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து வீடியோ வெளியிட்டதற்காக ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளேன்.
|
பிரதமருக்கு டேக்
பேச்சு சுதந்திரம் என்பது நகைச்சுவையாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது இந்த டிவிட் பதிவில்லை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் டிவிட்டர் ஹேன்ட்டில்களை டேக் செய்துள்ளார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?