Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
மும்பை: மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரபல நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி டைம் லைனில் இருந்து வருகிறார் பாயல்.
காங்கிரஸ் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தை குறிவைத்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான இவர் ட்விட்டரில் தன்னை ஒரு வலதுசாரி என்று காட்டிக்கொள்கிறார்.
3 நாளுக்குப் பிறகு வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்... மாமாங்கமும் வந்தாச்சாம்!
சமூகப் பிரச்சனை
பசு வதைக்கு தடை விதிக்கவில்லை என்று கேரள மக்களை விமர்சித்ததால் தலைப்பு செய்தியானார். அதன்பிறகு, நடிகை முத்தலாக் சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சர்ச்சைக்குரிய வீடியோ
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர் லால் நேரு பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
லால் பகதூர் சாஸ்திரி
ஜவகர் லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரபரப்பியதாகவும் கூறப்பட்டது. மேலும் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துகளையும் நடிகை பாயல் ரோஹத்கி பதிவு செய்திருந்ததாகவும் தெரிகிறது.
வழக்குப்பதிவு
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளில் நடிகை பாயல் ரோஹத்ஹி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
டிவிட்டரில் தகவல்
இந்நிலையில் நடிகை பாயல் ரோஹத்ஹி இன்று கைது செய்யப்பட்டார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து வீடியோ வெளியிட்டதற்காக ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளேன்.
|
பிரதமருக்கு டேக்
பேச்சு சுதந்திரம் என்பது நகைச்சுவையாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது இந்த டிவிட் பதிவில்லை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் டிவிட்டர் ஹேன்ட்டில்களை டேக் செய்துள்ளார்.