சட்டை பட்டனை கழட்டி விட்டு..படுமோசமாக போஸ் கொடுத்த பூனம் பாண்டே!
சென்னை : சட்டை பட்டனை கழட்டி விட்டு பூனம் பாண்டே சோஷியல் மீடியாவை அலறவிட்டுள்ளார்.
நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்த ஏடாகூடமான போட்டோவை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர், சட்டை பட்டனை கழட்டிவிட்டு கொடுத்துள்ள போட்டோவுக்கு லைக்குள் குவிந்தாலும், பலர் அவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பூனம் பாண்டே
இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின் கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் இருவருக்கும் சண்டை முற்றிவிட கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர்.

கணவர் மீது அடுக்கடுக்கான புகார்
இதையடுத்து, நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கிய லாக் அப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூனம் பாண்டே, கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க் பேசினார். 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன் என்னை நாயை அடிப்பது போன்று அடித்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலாடை இல்லாமல்
இதையடுத்து, கவர்ச்சி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்த பூனம் பாண்டே அவ்வப்போது மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஓவராக கவர்ச்சி காட்டாமல் இருந்த பூனம் இரு தினங்களுக்கு முன் மேலாடை இல்லாமல் ஆதித கவர்ச்சி போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த படங்களுக்கு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன. இந்த புகைப்படங்களுடன் பூனம் பண்டே இன்ஸ்டாகிராம் ரீலையும் பகிர்ந்துள்ளார்

சட்டை பட்டனை கழட்டி
தற்போது, சட்டை பட்டனை கழட்டி விட்டு கருப்பு மற்றும் வெள்ளையில் விதவிதமான போஸ்கொடுத்துள்ளார். கொஞ்ச நாள் அடங்கி இருந்த பூனம் பாண்டே மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும், ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் என அதற்காக தனி ஆப்புகளை உருவாக்கி வெளியிட்டு பல விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார் பூனம் பாண்டே.


Click it and Unblock the Notifications











