Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடடே, இப்படியும் 2 நடிகைகளா?: வியக்கும் பாலிவுட்
மும்பை: பாலிவுட்காரர்கள் வியக்கும் அளவுக்கு நடிகைகள் சோனம் கபூரும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.
பாலிவுட் நடிகைகள் இருவர் தோழிகளாக இருப்பது மிக மிக கஷ்டம் என்கிறார்கள். முன்னணி நடிகைகள் பலர் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்கள்.
இந்நிலையில் தான் பாலிவுட்டில் இரண்டு நடிகைகள் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.
சோனம் கபூர்
மனதில் உள்ளதை படக் படக்கென்று பேசி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் சோனம் கபூர். அவரது பேச்சாலேயே அவர் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார்.
ஜாக்குலின்
இலங்கையில் இருந்து வந்து மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றால் சோனம் கபூருக்கு உயிர். சோனம் என்றால் ஜாக்குலினுக்கு உயிர்.
அடடே
சோனமும், ஜாக்குலினும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். சோனம் கபூரின் வீட்டில் எந்த விசேஷமும் ஜாக்குலின் இல்லாமல் நடக்காது. அவர்களின் நட்பை பார்த்து பாலிவுட்டே வியக்கிறது.
விமர்சனம்
எங்கு சென்றாலும் கைகோர்த்து செல்கிறார்கள் சோனமும், ஜாக்குலினும். சோனம் என் சகோதரி போன்றவர். அவரைப் போன்ற ஒருவர் என் வாழ்வில் வந்ததால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
தங்க மனசு
சோனம் கபூருக்கு தங்க மனசு. அவர் அன்பானவர், சிறந்த மனுஷி, எங்கள் இருவரின் வாழ்வில் ஒளிவுமறைவு இல்லை, இருவரின் படங்கள் பற்றியும் பேசிக் கொள்வோம் என்கிறார் ஜாக்குலின்.