Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...' - கரீனா கபூர் பெருமிதம்
மும்பை : பாலிவுட் இயக்குநர்கள், பெண்களை இப்போதுதான் முற்போக்குவாதிகளாகச் சித்தரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
கரீனா கபூர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, 'திரையில் பெண்களின் சித்தரிப்பில் ஒரு மாறுதல் இருப்பது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. இந்தி சினிமாவில் இப்போது கதாபாத்திரங்களை எழுதுவதும் இளம் இயக்குநர்கள். அவர்களால் கடினமாக உழைத்து வெற்றி கண்டுள்ள பெண் ஆளுமைகளை வெற்றிகரமாகத் திரையில் கொண்டு வர முடிகிறது.'
இப்போது திரைப்படங்களில் பெண்களை முற்போக்குவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகக் கூறியுள்ளார். நவீன இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட பொறுப்புகளைக் கையாள்வதாகவும், தானும் ஒரு நவீன இந்தியப் பெண்ணாக உணர்வதாகவும் கரீனா கூறியுள்ளார்.
'பன்முகத்தன்மை கொண்டவர்களாக நவீன இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மணமான, சுதந்திரமான, வேலை செய்யும் பெண்ணாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கர்வத்துடனும், பெருமிதத்துடனும் இதைச் சொல்கிறேன். கல்யாணமானாலும் நான் வேலை செய்கிறேன். எனக்கென ஒரு அடையாளத்தையும் பெற்றுள்ளேன்' என்றார்.