Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சும்மா'வுக்காக பரிநிதி சோப்ராவைப் பிடித்த ராஜசேகர் தங்கை மகன்!
இந்தப் படத்துக்கு முன்பே பார்வதிபுரம் என்ற தமிழ்ப் படத்திலும், கமணம் என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மதன். ஆனால் அதற்கு முன்பே இந்த சும்மா வந்துவிடும் போலிருக்கிறது.
சும்மா படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை பரிநிதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார் மதன்.
கோலிவுட்டைப் பொறுத்தவரை இது கொஞ்சம் ஆச்சர்யமான செய்தி. காரணம் ஏற்கெனவே சில பிரபல இயக்குநர்கள் அணுகியும் கூட சம்மதிக்காத பரிநிதி, இப்போது அறிமுக இயக்குநருக்கு ஓகே சொல்லியிருப்பதுதான்.
அப்படி ஒன்றும் சாதாரணமாக ஓகே சொல்லிவிடவில்லையாம் பரிநிதி. மும்பை மீடியேட்டர் மூலம் தன்னைத் தொடர்பு கொண்ட மதனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட பரிநிதி, பெரிய தொகையாகக் கேட்டிருக்கிறார். எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டுதான் சம்மதம் பெற்றாராம். ஆனால் கேட்ட தேதிகளை முழுமையாகக் கொடுத்திருக்கிறாராம் பரிநிதி.
காடுகளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் ஒரு கதை இது என்கிறார் மதன். தமிழகம், ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களிலும் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.