Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை போலீஸில் புகார்!
புனே: ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடிகை ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள டாய்லெட்டில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்த பெண் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை.
சைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்
தீயாய் பரவியது
இதனை தொடந்து அந்த பெண் டாய்லெட்டில் இருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தீயாய் பரவியது.
போலீசாருக்கு டேக்
இதனை பார்த்த நடிகை ரிச்சா சட்டா, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தகவலை தெரிவித்ததோடு அதனை புனே போலீசாருக்கும் டேக் செய்திருந்தார்.
தனியார் நிறுவனம்
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறையை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிப்பதாகவும் அவர்களின் வேலைதான் இது என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவத்திற்காக ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் துப்புரவு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.