Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- News தமிழகத்தில் 19ஆம் தேதி காலை, மதியம் சினிமா காட்சிகள் ரத்து.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு
- Finance கோடிக்கணக்கான சொத்து, கார், ஆடம்பர வாழ்க்கையை தூக்கிப்போடும் ஜெயின் மக்கள்.. துறவியாவது ஏன்..?
- Automobiles ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
- Technology போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle அடர்த்தியான, அழகான கூந்தலுக்கு வீட்டில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்யுங்கள்..!
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை போலீஸில் புகார்!
புனே: ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடிகை ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள டாய்லெட்டில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்த பெண் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை.
சைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்
தீயாய் பரவியது
இதனை தொடந்து அந்த பெண் டாய்லெட்டில் இருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தீயாய் பரவியது.
போலீசாருக்கு டேக்
இதனை பார்த்த நடிகை ரிச்சா சட்டா, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தகவலை தெரிவித்ததோடு அதனை புனே போலீசாருக்கும் டேக் செய்திருந்தார்.
தனியார் நிறுவனம்
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறையை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிப்பதாகவும் அவர்களின் வேலைதான் இது என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவத்திற்காக ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் துப்புரவு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.