Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை போலீஸில் புகார்!
புனே: ஹோட்டல் டாய்லெட்டில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடிகை ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள டாய்லெட்டில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் அந்த பெண் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை.
சைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்
தீயாய் பரவியது
இதனை தொடந்து அந்த பெண் டாய்லெட்டில் இருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தீயாய் பரவியது.
போலீசாருக்கு டேக்
இதனை பார்த்த நடிகை ரிச்சா சட்டா, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தகவலை தெரிவித்ததோடு அதனை புனே போலீசாருக்கும் டேக் செய்திருந்தார்.
தனியார் நிறுவனம்
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறையை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிப்பதாகவும் அவர்களின் வேலைதான் இது என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவத்திற்காக ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் துப்புரவு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.