Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு, ஆனால் ...: நடிகை அடா சர்மா
Recommended Video
சென்னை: பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது என்கிறார் நடிகை அடா சர்மா.
பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளார். தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிக்கும் அடா சர்மா கூறியிருப்பதாவது,
பாலியல் தொல்லை
அனைத்து துறைகளிலுமே பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் சினிமா துறையை மட்டும் பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லை வீட்டில் இருந்து துவங்குகிறது. வீட்டில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.
படுக்கை
கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்களை நெருங்க விடக் கூடாது என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.
நடிகைகள்
என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் போதும் யாரையும் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. நடிகையான பிறகு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொண்டேன்.
மகன்கள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என் பாதுகாப்புக்காக ஆட்களை வேலைக்கு வைத்துள்ளேன். தேவையில்லாமல் ஊர் சுற்றாதே, நேரத்திற்கு வீட்டிற்கு வா என்று மகள்களை பார்த்து கூறும் பெற்றோர் பெண்களை மதிக்க வேண்டும் என்று மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பாலியல் கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும் என்கிறார் அடா சர்மா.