Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாய்ப்புக்காக படுக்கை: வரலட்சுமி சரத்குமார் கவலை
சென்னை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இன்னும் உள்ளது. அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார் வரலட்சுமி சரத்குமார். விஷால், விஜய் படங்கள், பாம்பன், வெல்வெட் நகரம் என கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.
திரையுலகம் பற்றி வரலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
படம்
ஸ்க்ரிப்ட் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும். என் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்து கொண்ட பிறகே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
அப்பா
அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்பதால் பாம்பன் பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். ஏற்கனவே ஷூட்டிங் துவங்கிவிட்டது. இது தான் நாங்கள் முதல் முறையாக சேர்ந்து பணியாற்றுவது. அப்பாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
முருகதாஸ்
விஜய் 62 படத்தில் நடிக்கும் வாய்ப்பு என் பிறந்தநாள் அன்று கிடைத்தது. அதை விட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. விஜய் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
எங்க வீட்டு மாப்பிள்ளை
ஆர்யா என் நல்ல நண்பர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நான் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடிப்பதால் இதுவரை யாருடனும் பிரச்சனை வந்தது இல்லை.
படுக்கை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அது தான் நடிகைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.