Don't Miss!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கும் ஒரு காலம் வரும் - கேத்தரின் தெரசா
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் வரும் என்று நடிகை கேத்தரின் தெரசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. மெட்ராஸ் படத்தில் கலையரசியாக வந்த இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.
தற்போது பாண்டிராஜின் கதகளி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருக்கிறார். நாளை இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் வரும் என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "ஆண்களுக்கு இணையாக பெண்களும் மதிக்கப்படவேண்டும் என்றே நானும் கருதுகிறேன். சினிமாவிலும் அது வரவேண்டும், அதற்காக சினிமாவில் ஒரேயடியாக முக்கியத்துவம் இல்லை என்று கூறிவிட முடியாது.
சமீப காலமாக பெண்களின் முக்கித்துவத்தை உணர்த்தும் வகையிலான படங்கள் அதிகளவில் வர ஆரம்பித்து இருக்கின்றன. மாயா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
எனவே நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு கேத்தரின் தெரசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.