Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவிதை எழுதும் சாந்தினி... ட்விட்டரில் நியூ போஸ்ட்
சென்னை : டிவிட்டரில் பிசியாக இருக்கு சாந்தினி புதிய புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். அதில், நீண்ட குளியல், சத்தமான இசை ஆழ்ந்த சிந்தனை இதுதான் தற்போதைய நிகழ்வு என்று கவிதையும் எழுதி உள்ளார்.
பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்திருந்தார். சென்னையில் படிப்பை முடித்த சாந்தினி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த பாக்யராஜ் மூலம் அவரிடம் வாய்ப்பு கேட்டார் சாந்தினி. அவர் வாய்ப்பு தந்ததை அடுத்து தமிழ் சினிமாவில் நடிகையானார் . வில் அம்பு படத்தில் ஓரளவுக்கு பேசப்படும் கதாநாயகியானார். படத்தில் இரண்டாம் கதாநாயகிதான் என்றாலும் படம் முழுக்க இவர் நடித்து இருப்பார்.
பிசியாக இருக்கும் சாந்தினி ட்விட்டரில் அவ்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது பிங்க் நிற ஆடையில் சில புகைப்படங்களை பதிவேற்றி அதில் நீண்ட குளியல் சத்தமான இசை ஆழ்ந்த சிந்தனை இதுதான் தற்போதைய நிகழ்வு என்று அழகான கவிதையும் கூறியிருக்கிறார் சாந்தினி.
சாந்தினிக்கு கடந்த ஆண்டு நந்தா எனும் நடன இயக்குனரை மணந்தார். இவர்கள் இருவரும் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தமிழில் பிஸியாக நடித்து வரும் சாந்தினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தாழம்பூ எனும் நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார் .
வில் அம்பு படத்திற்கு பிறகு காதல் முன்னேற்றக் கழகம் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது, நான் அவளை சந்தித்த போது என்ற படம் வெளியாக உள்ளது. இவருக்கு தற்போது 10 படங்களை கை வசம் உள்ளன. சாந்தினி தெலுங்கில் இதுவரை 4 படங்களில் நடித்து இருக்கிறார்