சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்
திருடா திருடி மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை சாயாசிங். அந்த படத்தில் வந்த மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டத்தால் தமிழகம் முழுவதம் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.
கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் அனந்தபுரத்து வீடு. இந்தப் படமும் தோல்வியடைந்தது. இதையடுத்து படங்களில் பெரிய அளவுக்கு வாய்ப்பு வராததால் பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு தாவினார். இயக்கத்திலும் ஆர்வம் காட்டினார்.
இந்நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்துவிட்டாராம். பல நாட்களாகவே அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கூறி வந்துள்ளனர். இந்தா அந்தா என்று தள்ளிப் போட்டவர் ஒரு வழியாக சரி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம்.
மகள் ஓ.கே. சொன்ன கையோடு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அவர பெற்றோர் துவங்குகிறார்கள். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று சாயா தெரிவித்துள்ளார்.
அப்படின்னா இந்நேரம் மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருப்பார்களே....


Click it and Unblock the Notifications












