Don't Miss!
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'!
திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். அவர் ஆடிய மன்மத ராசா பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் கோட்டை படத்தில் அஜீத்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இது நமக்கெல்லாம் தெரிந்த கதை.
அதே ஸ்டைலில் சாயாவும் ஒருவரை பார்க்காமலேயே அவருடன் நட்பாக உள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா. திருடா திருடியில் சாயாவுக்கு குரல் கொடுத்தவர் மகா. அவர் குரல் மிகவும் பிடித்துப் போக சாயா அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
இருவரும் தினமும் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதில் விந்தை என்னவென்றால் சாயாவும், மகாவும் இதுவரை ஒருவரையொருவர் பார்த்ததேயில்லை. மகாவுக்கு சாயாவைத் தெரியும். ஆனால் மகாவே நேரில் வந்து நின்றாலும் அவரை சாயாவால் கண்டுபிடிக்க முடியாது.
நாம் ஏன் சந்திக்கக் கூடாது என்று சாயா கேட்டதற்கு பார்க்காமலேயே காதலிக்கும்போது நட்பை வளர்க்க முடியாதா என்று மகா கேட்டுள்ளார். டீலிங் பிடித்துப் போக சாயாவும் அதையே தொடர்கிறார்.
இந்த சாயா நட்பு நீடிக்கட்டும்...!