Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'!
திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். அவர் ஆடிய மன்மத ராசா பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் கோட்டை படத்தில் அஜீத்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இது நமக்கெல்லாம் தெரிந்த கதை.
அதே ஸ்டைலில் சாயாவும் ஒருவரை பார்க்காமலேயே அவருடன் நட்பாக உள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா. திருடா திருடியில் சாயாவுக்கு குரல் கொடுத்தவர் மகா. அவர் குரல் மிகவும் பிடித்துப் போக சாயா அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
இருவரும் தினமும் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதில் விந்தை என்னவென்றால் சாயாவும், மகாவும் இதுவரை ஒருவரையொருவர் பார்த்ததேயில்லை. மகாவுக்கு சாயாவைத் தெரியும். ஆனால் மகாவே நேரில் வந்து நின்றாலும் அவரை சாயாவால் கண்டுபிடிக்க முடியாது.
நாம் ஏன் சந்திக்கக் கூடாது என்று சாயா கேட்டதற்கு பார்க்காமலேயே காதலிக்கும்போது நட்பை வளர்க்க முடியாதா என்று மகா கேட்டுள்ளார். டீலிங் பிடித்துப் போக சாயாவும் அதையே தொடர்கிறார்.
இந்த சாயா நட்பு நீடிக்கட்டும்...!