Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'!
திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். அவர் ஆடிய மன்மத ராசா பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் கோட்டை படத்தில் அஜீத்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இது நமக்கெல்லாம் தெரிந்த கதை.
அதே ஸ்டைலில் சாயாவும் ஒருவரை பார்க்காமலேயே அவருடன் நட்பாக உள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா. திருடா திருடியில் சாயாவுக்கு குரல் கொடுத்தவர் மகா. அவர் குரல் மிகவும் பிடித்துப் போக சாயா அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
இருவரும் தினமும் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதில் விந்தை என்னவென்றால் சாயாவும், மகாவும் இதுவரை ஒருவரையொருவர் பார்த்ததேயில்லை. மகாவுக்கு சாயாவைத் தெரியும். ஆனால் மகாவே நேரில் வந்து நின்றாலும் அவரை சாயாவால் கண்டுபிடிக்க முடியாது.
நாம் ஏன் சந்திக்கக் கூடாது என்று சாயா கேட்டதற்கு பார்க்காமலேயே காதலிக்கும்போது நட்பை வளர்க்க முடியாதா என்று மகா கேட்டுள்ளார். டீலிங் பிடித்துப் போக சாயாவும் அதையே தொடர்கிறார்.
இந்த சாயா நட்பு நீடிக்கட்டும்...!