Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹீரோயின்
ஜெயசூர்யா படத்தில் அர்ஜூனுக்கு லைலா, சாயாசிங் என 2 ஜோடிகள்
தொடர்ந்து தோல்விப் படங்களே கொடுத்தாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெறுவது எப்படி என்றுஅர்ஜூன் ஒரு புத்தகம் எழுதினால், மார்க்கெட் இல்லாமல் வீட்டிலிருக்கும் ராமராஜன், கார்த்திக் போன்றநடிகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
முதல்வனுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அர்ஜூனுக்கு எந்தப் படமும் ஓடவில்லை. ஆனாலும் மனிதருக்குவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது மீனாவுடன் ஜோடி சேர்ந்து அன்பு சகோதரன் என்ற படத்திலும்,லைலா - சாயாசிங்குடன் இணைந்து ஜெயசூர்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
லட்சுமி பிரியா கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் மனோஜ்குமார், செல்வி ஆகியோர் ஜெயசூர்யா படத்தைபிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள். கொல்கத்தா, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படப்பிடிப்புவேகமாக நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் அம்மாநில அரசிடம் விசேஷ அனுமதி பெற்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஹெளராபாலத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றைப் படம் பிடித்துள்ளார்கள். அர்ஜூன் எதிரிகளோடு மோதும்சண்டைக்காட்சி ஒன்றை விசாகப்பட்டினத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றை ஒரு வாரம் வாடகைக்கு எடுத்துபடமாக்கியுள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் கலவரம் நடப்பது போன்ற காட்சியை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போட்டுஎடுத்திருக்கிறார்கள்.
கொல்கத்தாவில் படப்பிடிப்பின்போது சாயாசிங் தவறிப்போய் ஆற்றில் விழுந்து விட்டாராம். அர்ஜூன் நீரில்பாய்ந்து சாயாசிங்கைக் கரை சேர்த்திருக்கிறார்.
அப்போது சாயாசிங், நீங்கள் காப்பாற்றாவிட்டால் கூட நான்பிழைத்திருப்பேன், எனக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும் என்று சொல்ல, அர்ஜூன் முகத்தில் லிட்டர் லிட்டராகஅசடு வழிந்திருக்கிறது.
ஒரு 420 பீடாவை போட்டா என்ற பாடலுக்கு லைலாவுடனும், தீக்குச்சி பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்குசாயாசிங்குடனும் அர்ஜூன் ஆடிப்பாடிய காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன.
படத்துக்கு இசை தேவா. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் மனோஜ்குமார். வடிவேலு, மனோரமா, பரவைமுனியம்மா, இளவரசு ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே