Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படிக்கிற பையன் பண்ணுற வேலையா இது.. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது
சென்னை: பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
தனது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார்.
நடிகை சனம் ஷெட்டி அளித்த தகவலை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர் ஒருவர் சிக்கி உள்ளார்.
ரொம்ப வல்கரா போறாங்க.. வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி போலீசில் புகார்
வாட்ஸ்அப்பில் டார்ச்சர்
நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டிக்கு தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய ஆபாச மெசேஜ்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார்.
கல்லூரி மாணவன்
நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பிய ஐடி மற்றும் போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் ஜான்பால் சிக்கியுள்ளார்.
அதிரடி கைது
நடிகைக்கு ஆன்லைனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது கல்லூரி மாணவன் என்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. கல்லூரி மாணவன் ராய் ஜான்பாலை அடையாறு சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடும் நடவடிக்கை
சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தத் தொடங்கினால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் பலர் மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சனம் நிம்மதி
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்த ஆபாச மெசேஜ்களால் மனதளவில் உடைந்து போயிருந்த சனம் ஷெட்டிக்கு இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன காரணத்திற்காக சனம் ஷெட்டிக்கு இப்படி ஆபாச மெசேஜ்களை கல்லூரி மாணவர் அனுப்பினார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.