Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மலர் டீச்சர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. மணிரத்னம் படத்தில் இருந்து சாய் பல்லவி விலகல்
சென்னை: மலர் டீச்சர் ரசிகர்களே, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படத்தில், சாய் பல்லவி நடிக்கவில்லையாம்.
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜூன் மாதம் புதிய திரைப்பட சூட்டிங் தொடங்கப்பட உள்ளது. இதுவும் மணிரத்னத்தின் டிரேட் மார்க்கான ரொமான்ட்டிங் சப்ஜெக்ட்தான் என்று கூறப்படுகிறது.
கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில், பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
பிரேமம்+அலைபாயுதே உணர்வை தரவல்ல திரைப்படம் என்ற பூரிப்பில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.
ஹிந்தி நடிகை ஆதிதி ராவ் அவருக்கு பதிலாக நடிக்க உள்ளார். படத்தின் சூட்டிங் தொடங்க தாமதம் ஏற்படுவதால், வேறு ஒரு பட கால்ஷீட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது என்று கருதி, சாய் பல்லவி விலகியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.