Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது: ரோஜா
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது:
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அரசியலிலும், அதிகாரத்திலும், உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இதனை தடுக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யாமல் கோவில் உற்சவர் சிலை போல் உள்ளனர்.
மேலும் இந்த விசயத்தில் கருத்து கூறிய ஆந்திரமாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யநாராயாணாவை வன்மையாக கண்டிப்பதாகவும் ரோஜா கூறினார். ஆந்திராவில் உள்துறை மந்திரியாக இருக்கும் சபீதா இந்திரா ரெட்டி தொகுதியிலேயே ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர தடுக்க வழி இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க ஆந்திர முதல்வர் கிரண்குமாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
உயர்ந்த பதவியில் இருப்போர் மற்றவர்களை போல இந்த சம்பவத்துக்கு நானும் வேதனைப்படுகிறேன் என்று சொல்வது வெட்ககேடானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேதனைப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் சோனியாகாந்தி கோவில் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் ரோஜா கூறியுள்ளார்.