Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்! - பூனம் பாண்டே
மும்பை: காருக்குள் குடித்துவிட்டு ஆபாச செயலில் நான் ஈடுபட்டதாக போலீசார் கூறுவது முழுப் பொய். அன்று நான் மது அருந்தவில்லை... என்னுடன் இருந்தவர் என் சொந்த சகோதரன், என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.
பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பை மிரா ரோட்டில் உள்ள பூங்கா அருகே தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை படுகவர்ச்சியாக இருந்தது.
அவரைக் கவனித்துவிட்ட சிலர் காரைச் சூழ்ந்து கொண்டனர். தகவலறிந்ததும் போலீசார் வந்து, ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.
கைது
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக பூனம் பாண்டேயை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.
செக்ஸ்?
காருக்குள் பூனம் பாண்டே 'கசமுசா' வேலையில் இருந்ததாகவும், இது சட்டப்படி தவறு என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி மீடியாவில் பரபரப்பைக் கிளப்பியது. விளம்பரம் தேடுவதற்காக பூனம் இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.
மறுப்பு
ஆனால் பூனம் பாண்டே அனைத்தையும் மறுத்துள்ளார். தான் காருக்குள் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், ஆபாசமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
சகோதரனே...
மேலும் அவர் கூறுகையில், "மும்பை போலீசார் என்னிடம் முரட்டுத்தனமாக கேள்விகளை கேட்டனர். காரில் இருந்தவருடன் தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனது குடும்ப பெயரே எனக்கு எதிராக ஆகியுள்ளது. என்னுடன் காரில் இருந்தது சகோதரனே. இது தலிபான் விட மோசமாக உள்ளது. காரில் இருந்தபோது 10.30 மணி இருக்கும். பெருநகர விதியின்படி இது ஒன்னும் கால தாமதம் இல்லை.
ஆதித்ய பாண்டே
நான் என்னுடைய சகோதரருடன்தான் இருந்தேன். அவர் என்னுடைய சொந்த சகோரரர் அதித்யா பாண்டே. நான் ஒன்றும் குடித்துவிட்டு இருக்கவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் போலீசால் விசாரிக்கப்பட்டேன்.
என் பெயரே எதிராகிவிட்டது
எனது பெயரை கேட்கும் வரை போலீசார் சாதாரணமாக நடந்து கொண்டனர். நான் பூனம் பாண்டே என்று கூறியதும் அவர்களது நடவடிக்கை மாறியது. அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள தொடங்கினர். நான் காருக்குள் இருந்த நபருடன் என்ன செய்தேன் என்று தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டினர்.
செய்தியைப் பரப்பினர்
நான் பூனம் பாண்டே என்று தெரிந்ததும் போலீஸ்காரர்கள் உற்சாகம் அடைந்தனர். அனைத்து மீடியாக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. என்னை பற்றி பலவிதமாக தகவல்கள் பரப்ப ஆரபித்துவிட்டன.
சகோதரனுடன் சென்ற எனக்கே இந்த நிலை என்றால்...
என் சகோதரருடன் சென்ற எனக்கே இந்த நிலை என்றால், தங்களது ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லும் மற்ற பெண்களின் நிலையை யோசித்து பார்க்கவே முடியவில்லை. தற்போது மும்பை நிர்வாகத்தில் தலிபானிஸத்தைப் பார்க்க முடிகிறது.
நானும் மும்பைக்காரிதான்...
பாண்டே என்பதால் உள்ளூர் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகம் என்னை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது (உபி, பீகார்காரர்களுக்கு மும்பையில் நெருக்கடி உள்ளது). நானும் மும்பை பெண் என்பதை அவர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
எப்போதும் என் ட்ரஸ் இதுதான்...
எப்போதும் போலத்தான் அன்றும் ஆடை அணிந்திருந்தேன். நடந்ததைப் பார்த்து என்னுடைய சகோதரர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். என்னை எனது பெற்றோர் திட்டினர்கள். இது என் தவறா, நான் யார்? என்பதை நீங்களே சொல்லுங்கள்," என்றார்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!