Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஹீரோயின்
விருது வாங்க விடாமல் என்னை சினிமாவை விட்டு விரட்ட வேண்டும் என்று பலர் சதி செய்கிறார்கள் எனறு நடிகை ரோஜா கண்ணீர் மல்கபேட்டியளித்தார்.
1995 ம் ஆண்டு நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் திரைப்படம் எடுப்பதற்காக முகுந்த்சந்த் போத்ரா
என்பவரிடம் ரூ 20 லட்சம் கடனாக வாங்கினர். ஆனால் இவர்கள் படம் எடுக்காததால் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு முகுந்த் சந்த்கேட்டார். அப்போது ரோஜா அவருக்கு 6 லட்ச ரூபாய் கொடுத்து விட்டு மீதிப்பணத்திற்கு செக் கொடுத்தார். அந்தச் செக் வங்கியில் பணம் இல்லாமல்திரும்பி வந்து விட்டது.
இந்நிலையில் போத்ரா கடன்தொகையை வசூல் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரோஜாவின்சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படி ரோஜாவை வைத்துப் படம் எடுக்கும் படஅதிபர்களுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பட அதிபர்கள் ரோஜாவின் சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தனர். அப்படியும் முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கிடைக்கவேண்டிய முழு பணமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு ரோஜாவை சிறந்த நடிகையாகத் தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருது 40 கிராம் எடையுள்ள தங்க மெடலாகும்.எனவே அந்த விருதை ஏலம் விட்டு கடன்தொகையை நீதிமன்றம் வசூலித்துத் தரவேண்டும் என்று மீண்டும் ரோஜாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ளார் போத்ரா.
ரோஜா கண்ணீர் பேட்டி:
என் மேல் வழக்குப் போட்டு எனக்கு மனஉளச்சலை ஏற்படுத்தினால் நான் சினிமாவை விட்டு ஓடி விடுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன்என்று போத்ரா நினைக்கிறார்.
என் தைரியத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. என் அப்பா-அம்மா கொடுத்த உயிரை அவருக்காக நான் ஏன் விட வேண்டும்?
நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. எனக்கும் அவருடைய குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. எல்லாம் கடவுளுக்குத் தெரியும்.
எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள்.அப்படியிருக்கும்போது தப்பே செய்யாத நான் மட்டும் எப்படி கஷ்டப்படுகிறேன் என்று தெரியவில்லை.
கடனை அடைப்பதற்காக நான் இதுவரை கல்யாணம் கூட செய்துகொள்ளவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்த பின்னும் நான் ஏன்இப்படிக் கஷ்டப்படுகிறேன் என்று தெரியவில்லை.
முதலில் எனக்கு எய்ட்ஸ் என்று வதந்தி பரப்பினார்கள். அப்புறம் கார்த்திக்குடன் காதல், திருமணம் என்று வசந்தி பரப்பினார்கள். இந்த வதந்திகள்சலித்துப் போய்விட்டது. இதற்கெல்லாம் இனி பதிலே சொல்லக் கூடாது. போத்ரா எனக்கு மேலும், மேலும் மனஉளச்சலை ஏற்படுத்துகிறார்.
என் மீது அன்புள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்கிறேன்.
எனக்கும், செல்வகணபதிக்கும் எத்தனையோ கஷ்டங்களை கொடுத்து விட்டனர். 10 ஆண்டுகளாக அதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் எங்களையாராலும் பிரிக்க முடியாது என்றார் ரோஜா.