நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்
கொச்சி: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை பாவனாவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 பேர் சேர்ந்து காரில் கடத்தி 2 மணிநேரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதை அவர்கள் தங்களின் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாவனாவை மிரட்டவே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமூகத்தில் பிரபலமாக உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடும் என பயந்து பாவனா தனக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்று அந்த கும்பல் நினைத்துள்ளது.
பாவனா துணிந்து போலீசில் புகார் அளித்து அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











