Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
கொச்சி : தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என அனைவராலும் அழைக்கப் பட்டு வரும் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ரொமான்ஸ் செய்து வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இங்கும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள அனுபமா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் பெரிதாக வெளியாகாத போதும், தற்போது பிரீடோம் அட் மிட்நைட் என்ற ஷார்ட் பிலிம் இவரது நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக்கை வெளியில் நீட்டி செம க்யூட்டான போட்டோவை வெளியிட்ட அனுபமாவை அனுஅனுவாக ரசித்து வருகின்றனர்.
மலையாள மொழிகளில்
எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தள்ளிப்போகாதே
அம்சமான முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்களின் பெரும் ஆதரவை கொண்டுள்ள அனுபமா தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுது நடிகர் அதர்வாவுடன் இணைந்து "தள்ளிப்போகாதே" திரைப்படத்தில் ரொமான்ஸ் செய்து வருகிறார்.
சூப்பர் த்ரில்லர்
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் த்ரில்லர் திரைப்படமான நின்னுக்கோரி நானியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வர இதை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கியுள்ளார்.
நாக்கை வெளியில் துருத்தி
அனுபமா இன்றுவரை பல திரைப் படத்தில் நடித்தாலும் பிரேமம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த நிலையில், இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுருட்டை முடியை ஃப்ரீயாக விட்டவாறு டைட்டான பனியன் அணிந்து கொண்டு நாக்கை வெளியில் துருத்தி கொஞ்சிக் கொண்டு செம க்யூட்டாக வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுபமாவை அனுஅனுவாக ரசித்து வருகின்றனர்.