Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அப்பா கூட இருந்தா 'அப்பாடா'ன்னு இருக்கும்.. ஸ்ருதி ஹாசன்
மும்பை: அப்பா செட்டில் இருந்தால் போதும், அந்த இடமே பாசிட்டிவாக மாறி விடும். கூட நடிப்பவர்களுக்கும் அவரிடமிருந்து பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக் கொள்ளும் என்று அப்பா கமல்ஹாசன் குறித்து பெருமிதம் காட்டியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
சபாஷ் நாயுடு.. தந்தையும், மகளும் இணைந்து பணியாற்றும் படம். அதாவது நடிப்பில். இருவரும் ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து விட்டனர் - நாயகன் - இசையமைப்பாளராக.
சபாஷ் நாயுடு படத்தில் நடிகர்களாக இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர். கூடவே இளைய மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குநராக இப்படத்தில் வேலை பார்க்கிறார்.
சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து சிலாகிப்புடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
முதல் நாள் ஷூட்டிங் அட்டகாசமாக இருந்தது. அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கெளரவம். பாசிட்டிவிட்டியை நமக்குள் கொண்டு வந்து விடுகிறார். அவர் செட்டில் இருந்தாலே போதும். அப்படியே நமக்கும் அது தொற்றிக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ஸ்ருதி.
Fantastic first day of shoot - so honoured to be Working with my father- he brings so much positivity and passion to a set #sabashnaidu
— shruti haasan (@shrutihaasan) June 7, 2016
சபாஷ் நாயுடு படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பத்து வருடத்திற்குப் பிறகு இரு இமயங்களும் கை கோர்த்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தியில் சபாஷ் நாயுடு ரெடியாகி வருகிறது.