Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆண்ட்ரியாவைப் போல் பாதிக்கப்பட்டு தைரியமாக உண்மையை சொன்ன நடிகை தீபிகா படுகோன்!
Recommended Video
மும்பை: நடிகை ஆண்ட்ரியாவை போல் நடிகை தீபிகா படுகோனும் தற்போது ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தீபிகா படுகோன், தமிழிலும் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவர் நடிப்பில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான பத்மாவத் படம் பெரும் வெற்றி பெற்றது.
படங்களில் நடிக்கவில்லை
தீபிகா படுகோன் அண்மையில் சக நடிகரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தீபிகா புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.
தீவிர சிகிச்சை
இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் தீபிகா.
உரிய நேரத்தில் சிகிச்சை
இதுதொடர்பாக பேசிய அவர், மன அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானலும் வரும் என்றார். மன அழுத்த நோய்க்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என்று கூறிய அவர், மன அழுத்தத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையலாம் என்றும் தீபிகா படுகோன் தெரிவித்தார்.
ஒவ்வொரு நிமிடமும் போராட்டம்
மன அழுத்த நோய் ஏற்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும் என்றும் தொடர்ந்து மன சோர்வு ஏற்படும் என்றும் தனக்கான பாதிப்பை விளக்கினார் தீபிகா. மேலுல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் வேலையில் கவனம் வராது என்றும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள் என்றும் கூறினார்.
ஆண்ட்ரியா பாதிப்பு
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள தீபிகா படுகோன் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தைரியமாக சொல்லியுள்ளார். அண்மையில் நடிகை ஆண்ட்ரியா திருமணம் ஆன நண்பருடன் கொண்ட தவறான உறவால் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதற்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.