தீபிகா திருமண வாழ்க்கை சிறக்க பூஜை!
தீபிகா படுகோனேவின் தாயார் சிறப்பு பூஜைக்கு திட்டமிட்டுள்ளார்
Recommended Video

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் தாயார் உஜ்ஜலா தனது மகள் திருமணத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகமே கல்யாண வைபோகமாக உள்ளது. சோனம் கபூர் ஆனந்த் அஹுஜா திருமணத்திற்கு பிறகு, இப்போது பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது ரன்வீர் சிங் தீபிகா படுகோனே தான்.

தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. பிறகு அது உண்மைதான் என உலகுக்கு உரைத்தனர். இப்போது இருவரும் மணவாழ்க்கையில் காலடி எடுத்து வைக்க தயாராகி வருகின்றனர்.
நவம்பர் மாதம் 20ஆம் தேதி இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமணம் நடைபெற உள்ளது. டெஸ்டினேஷன் வெட்டிங்காக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் இல்லறத்தில் சிறந்து நல்லறம் பேணி மணவாழ்க்கை வாழ தீபிகாவின் தாயார் உஜ்ஜாலா படுகோனே சிறப்பு பூஜைகள் செய்ய திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு பெங்களூருவில் உள்ள தீபிகாவின் வீட்டில் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.


Click it and Unblock the Notifications











