நல்லா பாருங்க... இந்த மீசை வச்ச குழந்தை எந்த ஹீரோயின்னு தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க...
மும்பை: பள்ளியில் படித்தபோது எடுக்கப்பட்ட பிரபல நாயகியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டை முன்னிட்டு பல ஹீரோ, ஹீரோயின்கள் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சிலர் வித்தியாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளனர். அவை ஏராளமான லைக்குகளை பெற்றுள்ளது.

மாறுவேடப் போட்டி
அப்படித்தான் செய்திருக்கிறார் இந்த ஹீரோயினும். அதாவது அவர் பள்ளியில் படித்தபோது, மாறுவேட போட்டியில் கலந்துகொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திக்கிறார்.
வெள்ளை குர்தா
அதில், வெள்ளை நிற குர்தா, தோளில் சால்வை என பெரிய மனிதரை போல இருக்கிறார் அந்த குழந்தை. ஆனால் யாரைப் போல இருக்கிறார் என்பது தெரியவில்லை. அந்த மீசை வைத்தக் குழந்தை வேறு யாருமல்ல, அது பிரபல இந்தி ஹீரோயின் தீபிகா படுகோன்.

சிறுவயது புகைப்படம்
அவரது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல ஏற்கனவே தனது சில சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் தீபிகா. அந்தப் புகைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

திராவக வீச்சு
நடிகை தீபிகா இப்போது சப்பாக் என்ற படத்தில் நடித்துள்ளார். இது திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை கதை. மேக்னா குல்சர் இயக்கியுள்ள இந்த படம் வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











