Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நிஜமான புன்னகை..' ஏதென்ஸ் ஏர்போர்ட்டில் நடிகை தீபிகா படுகோன் சிலை.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
மும்பை: ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீபிகா படுகோனின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தமிழில் ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? பிரேத பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்!
ஆஜராகி இருந்தார்
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகா படுகோன், சில மாதங்களுக்கு முன் போதைப் பொருள் வழக்கில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடன் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
ஏதென்ஸ் ஏர்போர்ட்
அனைவரும் தங்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருந்தனர். இந்நிலையில், கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில், நிஜமான புன்னகைகள் என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
பிரபலங்கள் சிலை
கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுத்திருந்த அந்நாட்டு அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, ஆப்ரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாட்டு பிரபலங்களின் சிலைகளும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கருப்பு நிற மார்பிள்
இந்தியா சார்பாக, நடிகை தீபிகா படுகோனின் மார்பளவு சிலையும் அந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கருப்பு நிற மார்பிள் கல்லில் தீபிகாவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பாலிவுட் நடிகை, ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது.
மேடம் டுஸாட்
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர். பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தீபிகாவுக்கு லண்டனின் உள்ள மேடம் டுஸாட் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருந்தது.