Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கத்ரீனாவை குத்திக்காட்டிய தீபிகா!
பாலிவுட்டில் எந்த முன்னணி நடிகைக்கும் சக நடிகையைப் பிடிப்பதே இல்லை. பட்டியல் இட்டால் அது நீண்டு கொண்டே போகும். தீபிகா படுகோனேவுக்கும், கத்ரீனாவுக்கும் லடாயாக இருந்தது.
இந்நிலையில் அவர்கள் சமாதானமாகி தோழிகளாகிவிட்டதாக செய்திகள் வந்தன. தப்பு, தப்பு நாங்கள் ஒன்றும் தோழிகள் எல்லாம் கிடையாது என்று கூறுவது போல் தீபிகா படுகோன் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கத்ரீனா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்று கூறி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து மன்னிப்பும் கேட்டார்.
தீபிகா தனது 'ஆரக்ஷன்' பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் படத்தின் கதை பற்றி அவருடைய கருத்து கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா 'இது அரசியல் விவகாரம்... நான் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.
இப்பொது புரிகிறதா அவர் யாரை மனதில் வைத்து இவ்வாறு கூறியிருக்கிறார் என்று. வேறு யாரு ராகுலைப் பற்றி பேசி மன்னிப்புக் கேட்ட கத்ரீனாவைத் தான்.
குத்திக்காட்டுவதி்ல் அப்படி என்னதான் அலாதி சந்தோஷமோ....