ஷாருக்கானை சந்திக்க பயந்து நடுங்கிய தீபிகா படுகோனே
மும்பை: தீபிகா படுகோனே முதன்முதலாக ஷாருக்கானை பார்க்க பயந்தாராம்.
தீபிகா படுகோனே ஃபரா கான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுடன் நடித்து பெயரும் புகழும் பெற்றார்.
இந்நிலையில் அவர்கள் ரோஹித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஷாருக்கும், தீபிகாவும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா கூறுகையில்,
ஷாருக்கானை முதன்முதலாக பார்க்க எனக்கு பயமாக இருந்தது. ஃபரா தான் என்னை ஷாருக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். முதன்முதலாக ஷாருக்கை பார்க்கச் சென்றபோது யஷ் சோப்ரா ஹீரோயின் போன்று வெள்ளை சல்வார் கமீஸில் சென்றேன். பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக இருக்க வேண்டும் என்றால் ஸ்டிரெயிட்டான கூந்தல், வெள்ளை நிற ஆடை அணிவது அவசியம் என்றார்.


Click it and Unblock the Notifications











