பேராசை பெருநஷ்டம்.. 12 கோடி காலி?.. அடிமேல் அடிவாங்கும் தீபிகா படுகோன்.. பிரபாஸ் ரசிகர்கள் சாபமா?
மும்பை: நடிகை தீபிகா படுகோனின் 82°E என்ற சரும பராமரிப்பு பிராண்ட் 2024-25 நிதியாண்டில் ₹12.26 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. வருவாய் சரிவைக் கட்டுப்படுத்தவும், லாபத்தை ஈட்டவும் நிறுவனம் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
82°E பிராண்ட் வெளியான நாள் முதல் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. அதன் அறிமுகம் தீபிகாவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், அதன் அதிக விலை பலரின் புகார்களுக்கு வழிவகுத்தது. தற்போது, நிறுவனம் பெரும் நஷ்டத்தில் சிக்கித் தவிப்பதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

தீபிகாவும் அவரது தந்தை பிரகாஷ் படுகோனும் 82°E இன் இயக்குநர்களாக செயல்படுகின்றனர். இந்தப் பிராண்ட் DPKA யுனிவர்சல் கன்ஸூமர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, 2023-24 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக சரிந்துள்ளது.
நடிகை தீபிகா படுகோன் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். கல்கி 2898 ஏடி படத்தில் இருந்தும் பிரபாஸின் இன்னொரு படமான ஸ்பிரிட் படத்தில் இருந்தும் அவர் அதிரடியாக வெளியேறியதும் வெளியேற்றப்பட்டதும் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் தனது ஸ்கின் கேர் பிசினஸிலும் பலத்த அடியை சந்தித்துள்ளார். சுமார் 12 கோடி நஷ்டம் என்றால் ரொம்பவே மோசமான ஒன்று என பாலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.
இந்த நஷ்டத்தைச் சரிசெய்யவும், லாபத்தை உறுதி செய்யவும் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக MCA தாக்கல் செய்த அறிக்கைகளில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. "வருவாயை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது லாபகரமான ஒரு வரலாற்றுப் பதிவை உறுதி செய்யும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பிராண்டை அறிமுகப்படுத்தியபோது தீபிகா, "உலகின் எந்தப் பகுதியில் நான் இருந்தாலும், சுய-பராமரிப்பின் எளிய செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்வது என்னை நிலைகுலையாமல் வைத்திருக்கிறது. 82°E மூலம், நாம் அனைவரும் நமது உண்மையான சுயத்துடன் இணைவதற்கும், எளிய மற்றும் தாழ்மையான சுய-பராமரிப்பு நடைமுறைகள் மூலம் தங்களைத் தயார் செய்வதற்கும் நான் நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், "அதில் முதல் படி எங்கள் சருமப் பராமரிப்புப் பொருட்களின் வரம்பு ஆகும். இவை கடுமையாக ஆய்வு செய்யப்பட்டு, கவனமாக தயாரிக்கப்பட்டு, மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க எளிமையான, மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், தீபிகா தனது பிராண்ட் குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துகொண்டார். "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகிற்காக இந்தியாவில் பிறந்த ஒரு நவீன சுய-பராமரிப்பு பிராண்டை உருவாக்கத் தொடங்கினோம். 82 E என்று உச்சரிக்கப்படும் எங்கள் பிராண்ட், இந்தியாவின் வழியாக நீளமாக ஓடும் தரமான மெரிடியனால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது உலகின் பிற பகுதிகளுடன் நமது உறவை வடிவமைக்கிறது" என்று அவர் எழுதினார்.
"@82e.official இல், சுய-பராமரிப்பு நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு எளிய, மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள பகுதியாக மாற்றுவதே எங்கள் நோக்கம். கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் பயணத்தின் இந்த பயணம் இதுவரை என்னுடையதாக இருந்தாலும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அன்பு மற்றும் நன்றியுடன், தீபிகா படுகோன், இணை நிறுவனர், 82°E" என அவரது பதிவு முடிந்தது.
திரைப்படத் துறையில், தீபிகா படுகோன் இரண்டு பெரிய திட்டங்களான (ஸ்பிரிட் மற்றும் கல்கி 2) படங்களிலிருந்து விலகியிருந்தாலும், அவர் ஷாருக்கான் மற்றும் சுஹானா கானுடன் இணைந்து 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பல நடிகைகள் தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தாலும் பெரிதளவில் சாதிப்பதை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதே தீபிகா படுகோனுக்கு ஏற்பட்டுள்ள இந்த 12 கோடி நஷ்டம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











