Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினியை தொடர்ந்து கமலுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே
சென்னை: இந்தி நடிகை தீபிகா படுகோனே ரஜினிகாந்தை தொடர்ந்து கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
தீபிகா படுகோனே முதன்முதலாக பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் பிரபலாமானார். இதையடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் பலரும் ஜோடி சேர விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது.
ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடி சேர்ந்த தீபிகா தற்போது உலக நாயகன் கமலுடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தீபிகா பாலிவுட்டில் முன்னணி நடிகருடன் அறிமுகமானார். அதே போன்று கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகமாகுகிறார்.
கோச்சடையான்
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா.
கமலை இயக்கும் லிங்குசாமி
கமல் ஹாசனை வைத்து லிங்குசாமி படம் ஒன்று எடுக்கிறாராம். அதில் கமலுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
நன்றிக்கடன்
விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் கமல் அல்லாடியபோது லிங்குசாமி தானாக வந்து உதவினாராம். அந்த நன்றிக் கடனுக்காகத் தான் கமல் லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.