Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் திருமண வரவேற்புக்கு முன்னாள் காதலர் ரன்பிர் ஏன் வரவில்லை?: தீபிகா விளக்கம்
மும்பை: தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் காதலரான ரன்பிர் கபூர் வராதது குறித்து நடிகை தீபிகா படுகோனே விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். தனது கணவர் தான் தன்னுடைய சிறந்த நண்பர் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரன்வீர் சிங் பற்றி தீபிகா மேலும் கூறியதாவது,
காதல்
நான் யஷ்ராஜ் நிறுவனத்தில் வைத்து தான் ரன்வீர் சிங்கை முதன்முதலாக பார்த்தேன். அப்பொழுது அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். இருப்பினும் அவர் என்னுடன் கடலை போட்டார். நீங்கள் என்னுடன் கடலை போடுகிறீர்கள் என்று நான் ரன்வீர் சிங்கிடம் தெரிவித்தேன்.
ராம் லீலா
6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரன்வீரை காதலிக்கத் துவங்கியபோது நாங்கள் லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிட அடிக்கடி வெளியே செல்வோம். ஆனால் ராம் லீலா படத்திற்கு தயாராக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் வீட்டில் நேரம் செலவிட்டதை மறக்கவே முடியாது. ஒரு நாள் பன்சாலி சார் எங்களை லஞ்ச் சாப்பிட தன் வீட்டிற்கு அழைத்தார்.
நண்டு
பன்சாலி சாரின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நண்டு துண்டு என் பற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதை பார்த்த ரன்வீர் உங்கள் வாயில் நண்டு மாட்டிக் கொண்டது என்றார். மாட்டிக் கொண்டது என்றால் வெளியே எடுங்கள் என்றேன். அந்த தருணத்தை எங்கள் மூவராலும் மறக்க முடியாது.
ரன்பிர் கபூர்
என் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரன்பிர் கபூர் வரவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு முன்பு அவரிடம் பேசினேன். அதன் பிறகு பேசவில்லை. ஆனால் அவர் அப்படித்தான். அவர் வராததில் எனக்கு ஆச்சரியம் இல்லை. இது தான் எங்களுக்கு இடையேயான உறவின் அழகு என்கிறார் தீபிகா. ரன்வீர் சிங்கை காதலிப்பதற்கு முன்பு தீபிகா ரன்பிரை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. அப்போ அவர் சொன்னது என்ன ஆச்சு?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை