Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோவின் ரசிகைகளால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை ஷேனாஸ்
பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் நடிகை ஷேனாஸ் ட்ரஷரிவாலா. அவர் தற்போது மெய்ன் அவுர் மிஸ்டர் ரைட் என்ற இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் இருக்கும்போது தைரியமாக காணப்படும் அவர் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றாலே பயப்படுகிறார். அதற்கு கதாரணம் படத்தின் ஷேனாஸ் ஜோடியாக நடிக்கும் பருண் சோப்தியின் தீவிர ரசிகைகள்.
பருண் சோப்தி பியார் கோ க்யா நாம் டூன்? என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியை நடத்தும் அவருக்கு எக்கச்சக்க ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் பாலிவுட்டில் நடிப்பதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகத் தகவல்கள் வெளியானது. இதைக் கேட்ட அவரது ரசிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் தான் தனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுவதாக ஷேனாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ஷேனாஸ் கூறுகையில்,
நான் பருணை அவர்களிடம் இருந்து பிரிப்பதாக அவரது ரசிகைகள் நினைக்கின்றனர். அவர்களுக்கு பருண் என்றால் உயிர். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக நினைத்து எனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் பருணுக்காக எதையும் செய்வார்கள் என்றார்.