twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவயானி, மீண்டும் நாயகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானி, சரத்குமாருடன் சூர்யவம்சம் படத்தில் அடடா பத்திக்குச்சு நெருப்புஎன்று குத்தாட்டம் போட்டதற்கு பிறகு ரொம்பவே பிஸியானார், பிறகு கல்யாண யோகம் வந்ததால் தேவயானிக்கு மெல்ல மெல்லசினிமா வாய்ப்புகள் சரியத் தொடங்கியது.பிழைப்பபுஓட்டணுமே என்று சின்ன திரை பக்கம் ஒதுங்கிய அம்மணிக்கு கோலங்கள் தொடர் கை கொடுத்ததில் ஏகப்பட்டமகிழ்ச்சி. அதில் கணிசமாக ரொக்கத்தை சேர்த்துக் கொண்ட தேவயானி நல்லபடியாக குடும்பத்தையும் காப்பாற்ற ஓடி ஓடிஉழைத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மாமியார் பிரச்சினையும் தீர்த்து வைத்து நல்ல மருமகள் என்று பெயரெடுத்த தேவயானிஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார்.நமக்கு இனிமே கதாநாயகி வாய்ப்பெல்லாம் கிடைக்காது அண்ணி வேடம், அக்கா வேடம், நியூ படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்குஅம்மாவாக நடித்தது போல் தான் நடிக்க கூப்பிடுவார்கள் என்று நினைத்திருந்த தேவயானிக்கு பெண் குழந்தை பிறந்த நேரமோஎன்னமோ அதிஷ்டம் தேடி வந்து வாயிற் கதவை தட்டியிருக்கிறது. என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் செந்தாழம் பூவே என்ற படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நாயகியாக புக்காகியுள்ளார்தேவயானி.முக்கியமான கதாபாத்திரங்களில் ரமேஷ்கண்ணா, பொன்னம்பலம், தலைவாசல் விஜய், ப்ரீத்தி வர்மா, ராஜஸ்ரீ, அபிநயஸ்ரீஆகியோர் நடிக்கின்றனர்.புனிதமான மருத்துவ தொழிலை செய்பவர்கள், அந்த தொழிலை முறைகேடாக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைமையமாக வைத்து செந்தாழம் பூவே படம் உருவாகிறது. வழக்கம் போல அபிநயஸ்ரீ கவர்ச்சியில் இதில் கலக்க உள்ளாராம்.தொல்காப்பின், பா.விஜய் பாடல்களுக்கு ஸ்ரீவிமல் ராஜா இசையமைத்துள்ளார். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினியராகபணிபுரியும் எம்.எஸ். இளங்கோவன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஏ.சி. தீபராஜ்.

    By Staff
    |
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானி, சரத்குமாருடன் சூர்யவம்சம் படத்தில் அடடா பத்திக்குச்சு நெருப்புஎன்று குத்தாட்டம் போட்டதற்கு பிறகு ரொம்பவே பிஸியானார், பிறகு கல்யாண யோகம் வந்ததால் தேவயானிக்கு மெல்ல மெல்லசினிமா வாய்ப்புகள் சரியத் தொடங்கியது.

    பிழைப்பபுஓட்டணுமே என்று சின்ன திரை பக்கம் ஒதுங்கிய அம்மணிக்கு கோலங்கள் தொடர் கை கொடுத்ததில் ஏகப்பட்டமகிழ்ச்சி. அதில் கணிசமாக ரொக்கத்தை சேர்த்துக் கொண்ட தேவயானி நல்லபடியாக குடும்பத்தையும் காப்பாற்ற ஓடி ஓடிஉழைத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மாமியார் பிரச்சினையும் தீர்த்து வைத்து நல்ல மருமகள் என்று பெயரெடுத்த தேவயானிஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார்.

    நமக்கு இனிமே கதாநாயகி வாய்ப்பெல்லாம் கிடைக்காது அண்ணி வேடம், அக்கா வேடம், நியூ படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்குஅம்மாவாக நடித்தது போல் தான் நடிக்க கூப்பிடுவார்கள் என்று நினைத்திருந்த தேவயானிக்கு பெண் குழந்தை பிறந்த நேரமோஎன்னமோ அதிஷ்டம் தேடி வந்து வாயிற் கதவை தட்டியிருக்கிறது.

    என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் செந்தாழம் பூவே என்ற படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நாயகியாக புக்காகியுள்ளார்தேவயானி.

    முக்கியமான கதாபாத்திரங்களில் ரமேஷ்கண்ணா, பொன்னம்பலம், தலைவாசல் விஜய், ப்ரீத்தி வர்மா, ராஜஸ்ரீ, அபிநயஸ்ரீஆகியோர் நடிக்கின்றனர்.

    புனிதமான மருத்துவ தொழிலை செய்பவர்கள், அந்த தொழிலை முறைகேடாக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைமையமாக வைத்து செந்தாழம் பூவே படம் உருவாகிறது. வழக்கம் போல அபிநயஸ்ரீ கவர்ச்சியில் இதில் கலக்க உள்ளாராம்.

    தொல்காப்பின், பா.விஜய் பாடல்களுக்கு ஸ்ரீவிமல் ராஜா இசையமைத்துள்ளார். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினியராகபணிபுரியும் எம்.எஸ். இளங்கோவன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஏ.சி. தீபராஜ்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X