'படுக்கையறைக் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் அந்த வியாபாரி'- நடிகை ராதா
சென்னை: தாலிகட்டாமலேயே குடித்தனம் நடத்தியபோது அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டுவதாக வைர வியாபாரி மீது நடிகை ராதா கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சுந்தரா டிராவல் நாயகி ராதா, சென்னை கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், திருவல்லிக்கேணியைச் சேந்த வைர வியாபாரியான பைசூல், சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகம் ஆனார். பின்னர் ஆசை வார்த்தை என்னிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்.

என்னை திருமணம் செய்துகொள்ளவதாக கூறி ஏமாற்றி விட்டார். பலமுறை என்னை அடித்து, மிரட்டி நிர்வாணப்படுத்துவார். நானும் அவரும் அந்தரங்கமாக இருந்த படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
என் பணம் நகைகளைத் திருப்பிக் கேட்டபோது, இந்த வீடியோக்களை வைத்து மிரட்டுகிறார். என் பணம் 50 லட்சம் மற்றும் நகைகளை மீட்டுத் தாருங்கள், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











