விஜய்யுடன் குடும்பம் நடத்தும் திரிஷா?.. உதயநிதியிடம் புலம்பினாரா?.. சுசித்ரா இப்படி சொல்றாங்களே
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டிருக்கும் சங்கீதா; அவருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அனைவரும் திரிஷா மீது சந்தேகப்பட்ட நிலையில்; விஜய்யோ அவருடன் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்தார். அப்போதிருந்து இவ்விவகாரத்தில் திரிஷாவின் பெயரும் பலமாக அடிபடுகிறது. இந்நிலையில் திரிஷா பற்றி பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ்நாட்டு அரசியல் களத்திலும், திரைத்துறையிலும் விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்தான் தலைப்பு செய்தியாக இருக்கிறது. கடந்த மாதத்தின் இறுதியிலிருந்தே இப்பிரச்னை பல திசைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத விஷயங்களில் ஒன்றாக அமைந்தது; விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது. சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என பலரும் சொல்லிய சூழலில்; அவருடனேயே ஜோடியாக வந்தது அந்த சந்தேகத்துக்கு வலு சேர்ப்பது போல் அமைந்துவிட்டது.

சுசித்ரா பேட்டி: இவ்விவகாரம் ஆரம்பித்ததிலிருதே நடிகை திரிஷா மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்துவருகிறார் சுசித்ரா. அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யின் தந்திரங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். விஜய் நிறைய பெண்களை ஏமாற்றியிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. திரிஷாவால்கூட விஜய்யை கன்ட்ரோல் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அவரை பற்றி யாருக்கும் ஐடியா கிடையாது. க்ரிஷ், சஞ்சீவ் எல்லாம் அவரது நண்பர்கள். அவர்கள் அனைவரும் கஞ்சா கைகள்தான்.
திரிஷாவிடம் புலம்புவார் விஜய்: அவர் எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அவர் அந்நியன் மாதிரி. சங்கீதா என்னை அடிக்கிறார் என திரிஷாவிடம் சென்றே உருட்டுவார். விஜய் அவர் மனைவி மீது இருக்கும் காதலை எப்போதோ இழந்துவிட்டார். சங்கீதா நிறைய முறை விஜய்க்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல் திரிஷாவுடன் ஜல்சா செய்தார். பனையூர் வீட்டில் விஜய் மட்டும் இல்லை. அவருடன் திரிஷாவுடனும் இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பற்றி: இரண்டு பேரும் பனையூரில் குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். திரிஷாவுக்கு உதயநிதியும் ஒரு பாய் ஃப்ரெண்ட்தான். விஜய்யை விட்டு அவரது மனைவி போய்விட்டார். அவருக்கு இப்போது ஒரு அரவணைப்பு தேவை என உதயநிதியிடம் சொல்லிவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் இருப்பார்கள். அப்போது உதய்யிடமிருந்து திரிஷாவுக்கு ஃபோன் மேல் ஃபோன் வந்துகொண்டே இருக்கும். ஆனால் திரிஷா ஃபோனே எடுக்கமாட்டார்.
பொய் சொல்லும் திரிஷா: நான்கு நாட்கள் கழித்து ஃபோனை எடுத்து, விஜய் என்னை விடவே இல்லை. அங்கிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்றே தெரியவில்லை. ஐ மிஸ் யூ உதய் என சொல்வார். அவர் இப்படி ஒரு கேம் ஆடுவார். சங்கீதா அனுப்பிய லீகல் நோட்டீஸை வெளியே கசிய விட்டது திரிஷாவின் ஐடியாவாகத்தான் இருக்கும். இந்த மாதிரியெல்லாம் அவரால்தான் யோசிக்க முடியும். ஏற்கனவே சங்கீதா மீது பல வருடங்கள் காண்டில் இருந்தார் திரிஷா. விஜய்யுடன் இருந்த ஃபோட்டோக்களை பகிர்ந்ததே சங்கீதாவை வெறுப்பேற்றத்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications















