Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எழுந்து நின்றாரா யாஷிகா... நடிகர் பகிர்ந்த ஃபோட்டோ உண்மை தானா ?
சென்னை : இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விடாமல் கவர்ச்சி ஃபோட்டோஷுட்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு யாஷிகாவிற்கு கிடைத்தது. இந்த படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போதே மேலும் பல படங்களில் நடிக்க யாஷிகா ஒப்பந்தமானார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஜுலை 25 ம் தேதி விபத்தில் சிக்கினார்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த யாஷிகா, அதிவேகமாக காரை இயக்கி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குணமாகி வரும் யாஷிகா ஆனந்த்.. மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி என்ன பண்றாரு பாருங்க!
காயமடைந்த யாஷிகா
23 வயதாகும் யாஷிகா, படு மோசமாக காயமடைந்தார். இடுப்பு, கால், தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. இந்த விபத்தில் தான் படுத்த படுக்கை ஆகி விட்டதாகவும், எழுந்து நடக்க 5 மாதங்கள் ஆகும் எனவும் யாஷிகாவே அப்டேட் வெளியிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபோட்டோவில் கூட, இரண்டு கால்களிலும் கட்டுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது போல் இருந்தார்.
டிஸ்சார்ஜ் ஆன யாஷிகா
பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல் வெளியானது. வீட்டில் அவரது அம்மாவுடன் இருப்பது போன்ற ஃபோட்டோவை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்திருந்தனர்.
யாஷிகாவை சந்தித்த அசோக்
இந்நிலையில் நடிகர் அசோக், தனது மனைவியுடன் சென்று யாஷிகாவை சந்தித்துள்ளார். இந்த தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த அசோக், யாஷிகா விரைவாக குணமடைந்து வருகிறார். எனக்கும், எனது குடும்பத்திற்கும் சிறந்த தோழியாக இருக்கும் அவர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் மீண்டு வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
யாஷிகா நின்றாரா
அதோடு யாஷிகா மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் அசோக் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து விட்டு, விபத்திற்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகு யாஷிகா எழுந்து நின்றதாக கூறி கமெண்ட் செய்தனர். ஆனால் இது இப்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோவா, காலில் அவ்வளவு பெரிய கட்டு போட்டு படுத்திருந்தார். எழுந்து நடக்க 5 மாதங்கள் ஆகும் என கூறிய யாஷிகா எப்படி யாருடைய துணையும் இல்லாமல் நிற்கிறார் என சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
அந்த ஃபோட்டோவில் யாஷிகாவின் முகமும், தற்போது இருக்கும் முகம் போல் இல்லாமல் மிக சிறு வயதாக காணப்படுகிறார். அப்படியானால் இது பழைய ஃபோட்டோ தானே என பலர் கூறி உள்ளனர். ஆனால் நடிகர் அசோக் பதிவிட்ட தகவலும், ஃபோட்டோவும் உண்மை தானா என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.